சிவாவை டென்ஷனாக்கிய ராஜ்கமல் நிறுவனம் ! ஆறுதல் கூறிய மாரி செல்வராஜ் !
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2024/01/large_sivakarthikeyan-and-mari-selvaraj-161181.png)
படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் எல்லோரிடமும் கலகலப்பாக இருக்கும் வழக்கம் கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மட்டும் ரொம்பவே அமைதி காக்கிறாராம். ஷாட் முடிந்ததும் ஓரமாக ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு, யாருடனும் பேசுவதில்லையாம். சொன்ன நாட்களைக் கடந்து படப்பிடிப்பு நாட்கள் இழுத்துக்கொண்டே போவதால் ஏற்பட்ட கோபம்தான் காரணம் என்கிறார்கள்.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2024/01/ntlrg_202305051652389297956812949619652279313.jpg)
மேலும் பரியேறும் பெருமாள் படம் வெளியான போதே மாரி செல்வராஜ் – சிவகார்த்திகேயன் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. மாரி செல்வராஜ் தணுஷை நோக்கி சென்றதும், அந்த முயற்சி தள்ளிப்போனது. மாமன்னன் படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் மாரி செல்வராஜை அழைக்க, அவரும் ஒரு ஒன்லைன் சொல்ல, சிவகார்த்திகேயனுக்கு ரொம்பவே பிடித்துப் போனதாம். இருவரும் இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.