அதிமுக EX அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல், குட்கா வழக்கில் விஜயபாஸ்கர், பி.வி. ரமணாவுக்கு சிறை தண்டனை உறுதி !..?
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2023/11/vijayabaskar-c0011-1634524952-1663136886.jpg)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி. ரமணா ஆகியோர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ( பத்து மசோதாக்கள் ) ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இதுதவிர அதிமுக அமைச்சர்கள் ஊழல்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டு, மேல் நடவடிக்கை எடுப்பதற்காக ஆளுநர் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2023/11/14-aiadmk-minister-ramana-300681973725761239048.jpg)
இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்ததால், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆளுநர் தரப்புக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்டுள்ளார்.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2023/11/202107260721072827_The-AIADMK-has-added-assets-worth-Rs-268-crore-to-its_SECVPF.gif)
அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் ( சுகாதார நலத்துறை ), பி.வி. ரமணா ( வணிக வரித்துறை ) ஆகியோர் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும், விஜயபாஸ்கர் ( போக்குவரத்து ), ( கே.சி. வீரமணி ( வணிகவரி ) ஆகியோர் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2023/11/kcveeramani-01-16317581641160040774571380010.jpg)
ஆளுநரின் ஒப்புதல் கிடைத்திருப்பதால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி. ரமணா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என பொதுநல நோக்கர்கள் கருதுகிறார்கள்.