சினிமா

தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியில் இருந்து நடிகர் பார்த்திபன் திடீர் விலகல்

தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராக நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த டிசம்பரில் செயற்குழுகூட்டம் நடந்தபோது, ஏற்கெனவே துணைத் தலைவராக இருந்த இயக்குநர் கவுதம் மேனனுக்கு பதிலாக, பார்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக தமது பதவியை கௌதம் மேனன் ராஜினாமா செய்ததை அடுத்து பார்த்திபன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் இருந்து பார்த்திபன் ஒதுங்கி இருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகியுள்ளது பல்வேறு குழப்பங்களையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில்தான் பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி என்ன என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button